இளமையில் கல் என்று
எழுத்துக்கூட்டிப் படிக்கும்போதே,
வறுமையெனும் கல் விழுந்து
வழிமாறிப்போனது வாழ்க்கை...
கல்லை நகர்த்த
முயற்சித்துத் தோற்றுப்போக,
கல்விதான் நகர்ந்துபோச்சு
கைகளுக்கு எட்டாமல்...
இன்றைக்கு,
அடுக்கிக் கல்சுமந்தால்
அடுத்தவேளை சோறு,
அதிலும்,
வளர்த்திக் குறைவென்று
சம்பளமும் 'வேறு'...
ம்...ஒன்றுஒன்றாய்க் கூட்டி
நாலுவரிசை வந்தாச்சு...
இனி,
இன்னும் சிலவரிசை
ஏற்றிப் பூசிவிட்டால்,
நாங்களும் தூண்கள்தான்
நாளைய இந்தியாவுக்கு!
எழுத்துக்கூட்டிப் படிக்கும்போதே,
வறுமையெனும் கல் விழுந்து
வழிமாறிப்போனது வாழ்க்கை...
கல்லை நகர்த்த
முயற்சித்துத் தோற்றுப்போக,
கல்விதான் நகர்ந்துபோச்சு
கைகளுக்கு எட்டாமல்...
இன்றைக்கு,
அடுக்கிக் கல்சுமந்தால்
அடுத்தவேளை சோறு,
அதிலும்,
வளர்த்திக் குறைவென்று
சம்பளமும் 'வேறு'...
ம்...ஒன்றுஒன்றாய்க் கூட்டி
நாலுவரிசை வந்தாச்சு...
இனி,
இன்னும் சிலவரிசை
ஏற்றிப் பூசிவிட்டால்,
நாங்களும் தூண்கள்தான்
நாளைய இந்தியாவுக்கு!
0 comments:
Post a Comment